இன்று முதல் அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் அறிவிப்பு

உலகில் உள்ள அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் அறிவித்துள்ளது.இலங்கையர்களும் சுற்றுலா வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும்.அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றிருக்க வேண்டும்.உலக சுகாதார அமைப்பால் இதுவரை AstraZeneca, Moderna, Pfizer, Johnson & Johnson, Sinopharm, Sinovac,Covishield ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தமது நாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்ட நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு சுற்றுலா வீசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் வைத்து கட்டாய ராபிட்
ஆண்டிஜன் (Rapid Antigen) சோதனையை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய அரபு எமரேட்ஸ் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *