இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை தடுப்பதற்காக மத்திய அரசு எவ்வளவோ முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை.மேலும் இன்டர்நெட் சேவையை தடை செய்துள்ளனர். மின்சாரம், கழிப்பிட வசதிகளையும் தடை செய்துள்ளனர்.அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட் செய்து இருந்தனர்.இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக இந்திய பிரபலங்களான கங்கனா ரனாவத், அக்ஷய் குமார்,சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி,ரோகித் சர்மா உள்ளிட்ட பலர் டுவிட் செய்திருந்தனர்.இன்டர்நெட் சேவையை தடை செய்துள்ளனர். மின்சாரம், கழிப்பிட வசதிகளையும் தடை செய்துள்ளனர்.மேலும் இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜனதா தலைவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது கருத்தை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை, வளரும் ஜனநாயகத்தின் அடையாளமாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்திய உச்ச நீதிமன்றமும் இதையே கூறி உள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது.இன்டர்நெட் உட்பட தகவல் தொடர்புகள் தடையின்றி கிடைப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு அடிப்படையானது மற்றும் வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும் என அவர் மேலும் தெரிவித்தார் .