இந்திய சுற்றுப்பயணத்தை தவிர்த்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு

அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் ஜனவரி 26ம் திகதி நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்.

இங்கிலாந்தில் தொற்றுநோயைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்து உள்ளார்.


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வர முடியாது சூழ்நிலையை விளக்கி வருத்தம் தெரிவித்து உள்ளார் என இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *