இந்தியாவில் நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளுக்கு அனுமதி

இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் நடத்த இந்திய மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் முதல் அனுமதியளித்திருந்த நிலையில் கொரோனாத் தொற்றுப்பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.அந்த வகையில் திரையரங்குகளில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, திரையரங்குகளில் 100 % இருக்கைகளையும் நாளை முதல் பயன்படுத்திக்கொள்ள முடிவதோடு திரையரங்குகளில் முகக் கவசம் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கடந்த 13 ஆம் திகதி நடிகர் விஜயின் மாஸ்டர் படத்துக்கு முதலில் 100% இருக்கைகளுக்கு மாநில அரசு அனுமதியளித்திருந்த நிலையில் பின்னர் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய 50% இருக்கைகளாக மாற்றப்பட்டு மாஸ்டர் படம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *