பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. இந்நிலையில்
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
நேற்றைய நிலவரப்படி 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இதனால்,இந்தியாவிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.