டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றது. அப்போது சில கார்கள் சேதமடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.