இந்தியாவின் தடுப்பூசி உற்பத்திதிறன் உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம் என்று ஐ.நா பொதுச்செயலாளர்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலதீவு, நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்துள்ளது.இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ,கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்கிறது.இந்நிலையில், வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதையொட்டி ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியதாவது.இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம்.உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரம் சாத்தியமா என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவில் இருக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *