இத்தாலியில் ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 641 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 46 ஆயிரத்து 762 ஆக உள்ளது.ஒரே நாளில் 307 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 578 ஆக உள்ளது.மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24.81 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 4.65 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *