ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்களை அந்தந்த நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு அழைத்துச் சென்றன. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தின் அருகே ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத இயக்கம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை விட மாட்டோம், தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதன்படி ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே படைகள் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.நங்கஹார் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐஎஸ்ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட முக்கிய நபர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.