ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு 3 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் மற்றும் அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் வந்த வாகனத்தை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.செய்தித் தொடர்பாளர் ஜியா வதானுக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான் அமைப்பு இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *