ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் முன்பைவிட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்துக்கு அருகில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது .
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்தனர்.