ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது – ஐநா

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசுப்படைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை நிறுத்தி வைத்திருந்தது. சுமார் 20 ஆண்டுகளாக அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து படைகளும் அங்கிருந்து வெளியேறிவிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதும், தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்தது. ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை அரசு படைகளிடம் இருந்து தலிபான் படையினர் கைப்பற்றி விட்டனர். மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அங்கிருந்து அமெரிக்கர்கள், இங்கிலாந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அன்டோனியோ குட்ரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருதரப்பு மோதலில் கடந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். இருதரப்பினரின் மோதல் காரணமாக 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவித்த அவர், இந்த சூழலில் மனித நேய உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *