தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த 11 மாத காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பலா் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா் அதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில் . அண்மையில் நடிகா் சூா்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் குணமாகியுள்ளார் . இந்நிலையில் தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது . இதையடுத்து பழ.நெடுமாறனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வந்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பழ.நெடுமாறன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.பழம் பெரும் தலைவரான பழ.நெடுமாறன் இலங்கைத் தமிழ் மக்களுக்காக மத்திய மாநில அரசுகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.இருந்தபோதிலும் அணைத்து அரசியல் தலைவர்களாலும் இன்றுவரை மதிக்கப்படும் ஒரு ஒப்பற்ற தலைவர் ஐயா பழ.நெடுமாறன்.அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பது அணைத்து மக்களின் வேண்டுதலாகும்.