அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர் .டிரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய இந்த கலவரம் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கலவரத்தை தூண்டுவதா என்று உலக தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். நாடாளுமன்ற முற்றுகை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையொட்டி டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், வரும் 20ம் தேதி நடக்கும் ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவிற்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பைப் புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுவார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோ பைடன் “இது ஒரு நல்ல விஷயம், நான் அவரைப் பற்றி எண்ணிய மோசமான கருத்துக்களைக் கூட மீறிவிட்டார், அவர் நாட்டிற்கு ஒரு சங்கடமாக இருந்தார், உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் அந்த பதவியை வகிக்க தகுதியற்றவர்” என்று பிடன் கூறினார்.எவ்வாறாயினும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக பைடன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *