கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தவனம் உள்ளனர் அது மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அமெரிக்க மக்கள் அரசங்கத்தின் நிதியுதவியை நாடியுள்ளனர் இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சனையைக் கையாளுவேன் என்று பிரசாரத்தின் போது புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் கூறியிருந்தார். தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளார்.இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார்.மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு கிழமை தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டாலரில் இருந்து 400 டாலராக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.