அமெரிக்க படை ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் கெடு நீட்டிப்பு கிடையாது – தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியதாவது அமெரிக்கப் படைகள் வெளியேற கெடுவை நீட்டிக்க மாட்டோம். ஆகஸ்டு 31-ம் தேதிக்குள், அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்றும் பணியை முடிக்க வேண்டும்.அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கும், தலிபான்களுக்கும் இடையே சந்திப்பு நடந்ததா என்று எனக்கு தெரியாது. நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. விமான நிலையத்தில்தான் குழப்பம் நிலவுகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *