வஷிங்கடனில் உள்ள செனட் சபையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களினால் ஏற்பட்ட பாரிய கலவரத்தால் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நேற்று அமெரிக்கவில் – வஷிங்டனில் உள்ள செனட் சபையில் இடம்பெற்றது.

இந்நிலையில் வெள்ளமாளிகையில் இருந்து தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை தான் ஏற்க போவதில்லை என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே கலவரம் வெடித்துள்ளது.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் பேரணியாக சென்று செனட் சபை முன் கலவரத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பையும் மீறி பலர் செனட் சபைக்குள் நுழைந்ததால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றதை அடுத்து தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். எப்பிஐ அதிகாரிகளும் களமிறக்கப்பட்டனர். செனட் சபையை சுற்றுயுள்ள பகுதிகள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வஷிங்கடன் மேயரால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஜோ பைடன் 20ம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் 21ம் திகதி வரை அவசரகால நிலை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.