அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையை பதவியிலிருக்கும் ஜனாதிபதியே தூண்டியது எங்கள் தேசத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானம் – ஒபாமா

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது.


சட்டபூர்வமான தேர்தலின் முடிவை பற்றி அடிப்படையற்ற விதத்தில் பொய்சொல்லிக்கொண்டிருக்கும் பதவியிலிருக்கும் ஜனாதிபதியால் தூண்டப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை எங்கள் தேசத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானம் என்பதை வரலாறு சரியான விதத்தில் நினைவில் வைத்திருக்கும்.
ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் இந்த வன்முறைக்கு எதிராக உரத்தகுரலில் கருத்து வெளியிட்டிருப்பதை பார்த்து நான் மனநிறைவடைகின்றேன்.ஜோ பைடன் எங்கள் அரசியலிற்கான பொதுவான நோக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு – மீட்பதற்கு முயலும் இந்த தருணத்தில் தற்போதும்-எதிர்வரும் நாட்களிலும் எதிர்வரும் வாரங்கள் மாதங்களிலும் எங்களிற்கு இதுபோன்ற தலைவர்கள் அவசியம்.கட்சி வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு நாங்கள் அமெரிக்கர்கள் அனைவரும் பைடனின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கவேண்டும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *