அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.
எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி நீதி மன்றங்களை நாடியுள்ளார்.
இந்தநிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு போட்டியிடும் 2 ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோ பைடன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் ஜனாதிபதி டிரம்ப் டிரம்ப் ஏன் இன்னும் ஜனாதிபதி பதவியை விரும்புகிறார் என்று எனக்கு தெரியவில்லை தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும, புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக காட்டமாக கூறினார்.
இதற்கிடையில் நாடாளுமன்றம் கூடி ஜனாதிபதியை தேர்வு செய்யும் போது குடியரசு கட்சி எம்.பி.க்கள் அதனை நிராகரிக்க வேண்டுமென டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.