அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரானஅரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை செனட் சபை நிறைவேற்றியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.232-197 என்ற அடிப்படையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியரசுக்கட்சியின் பத்து உறுப்பினர்கள் அரசியல் குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதன் அடுத்த கட்டநடவடிக்கையாக டிரம்ப் செனட் விசாரணையை எதிர்கொள்கின்றார் செனெட்டில் அவர் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அவர் தடைசெய்யப்படுவார்.
இன்னமும் ஒரு வாரகாலத்தில் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறவுள்ள நிலையிலேயே அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.