மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும், கமலும் நெருங்கிய நண்பர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி பாடி இருக்கிறார்.இந்த நிலையில் இன்று எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ pic.twitter.com/2Zs7j0pRTs
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2021