வெற்றி விழாவில் சிம்பு கலந்துகொள்ளாததன் காரணம் இதுதானா

நடிகர் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மாநாடு படம் வெளியாகி நல்ல வசூல் குவித்த நிலையில் அதன் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்ஸஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இன்று நடந்த அந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் சிம்பு வரவே இல்லை. அவர் வராதது ஏன் என பல்வேறு பேச்சுகள் சினிமா துறையில் உலா வர தொடங்கி இருக்கிறது.

சிம்பு வேறு படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால் தான் வரவில்லை என ஒரு தகவல் வந்திருக்கிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடக்கும் நிலையில் சிம்பு அதில் பிஸியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மாநாடு சாட்டிலைட் ரைட்ஸ் தொடர்பாக சிம்புவின் அப்பா டிஆர் மற்றும் தயாரிப்பாளர் இடையே உரசல் இருப்பதால் தான் அவர் வரவில்லையோ எனவும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.சக்ஸஸ் மீட் பற்றி பதிவிட்டு இருக்கும் வெங்கட் பிரபு “Missed u STR!! Love u so much” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *