நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை அதிபர் சார்பாக இவ்வறிவித்தல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *