நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஷ்வர்யாவை பிரிந்தார் நடிகர் தனுஷ் – 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஷ்வர்யா. இவரது கணவர் தனுஷ் இவர் பிரபல டைரக்டரான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனாவார் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்களின் 18 ஆண்டு கால வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. ஐஷ்வர்யாவைப் பிரிந்து வாழப்போகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் தற்போது ரஜினி வீட்டிற்கு அருகே போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். விரைவில் இந்த வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மனைவியை பிரிகிறார் தனுஷ் ஆனால் அதற்கும் யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை பிரிய போவதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே தகவலை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களின் இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *