முகமது நபி தொடர்பாக அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை- பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு

பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் முகமது நபியை அவதூறாக கேலிச்சித்திரங்களை அனுப்பியதாகவும், புனித நபர்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.முஹம்மது நபியின் இத்தகைய “இழிவுபடுத்தும் படங்களை” பகிர்வது நாட்டின் கடுமையான குற்றமாகும்.இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.சாகும் வரை அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அனீகா ஆதிக்கின் மரண தண்டனை லாகூர் உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு உரிமையும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *