தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,284 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 606-ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 610-ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 89 பேருக்கும், செங்கல்பட்டில் 48, ஈரோட்டில் 45 பேருக்கும், திருப்பூரில் 40 பேருக்கும், சேலத்தில் 26 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 44 ஆயிரத்து 037 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 679 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 673 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,735 ஆக உயர்ந்துள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6,629 ஆக குறைந்துள்ளது.