நைஜீரியாவில் மசூதியை சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு தொழுகையில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் 18 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

நைஜீரியா மஷேகு பகுதி மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மசூதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சுமார் 18 கிராம மக்கள் உயிரிழந்தனர்.நைஜீரியாவில் இன வன்முறை, நீர் மற்றும் நிலத்தை பயன்படுத்துவதற்கான மோதல் பல சகாப்தங்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக நீடிக்கும் மோதலில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். இந்த மோதலில் சிக்கிய புலானி மக்களில் சிலர் உள்ளூர் விவசாய சமூகங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு பிறகு, நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. குறிப்பாக, வடமேற்கு மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.இதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு வடமேற்கு சோகோடோ மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மசூதியில் இந்த தாக்குதல் மீண்டும் நடந்துள்ளது.இது குறித்து அம்மாநில போலீஸ் கமிஷனர் மாண்டே குரியாஸ் கூறியதாவது:-

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மசூதியை சுற்றி வளைத்து திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் கிராம மக்களுக்கும் புலானி கால்நடை மேய்ப்பாளர்க்கும் இடையிலான மோதலுடன் தொடர்புடையது. மாஷேகு பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பாக இருப்பதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *