ஈராக் நாட்டில் அப்பாவி மக்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் -11 பேர் பலி

ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் ஷிட்டே என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.பயங்கரவாதிகள் நடத்திய இந்த கோர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *