பதவியேற்ற முதல் நாளிலேயே 15 உத்தரவுகளை மாற்றியமைத்த ஜோ பைடன்

அமெரிக்காவின் அதிபராக நேற்று பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த 15 கொள்கை முடிவுகளை  மாற்றியமைத்து முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன்.

கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்ப்ன டிரம்ப் நிர்வாகத்தின் முந்தைய உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். மற்றும் உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இனைந்து செயல்படுவது என்றும் பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *