படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையாவில்இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென்னு படகின் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நடுகடலில் நின்றது.இதனால் நிலை தடுமாறிய அந்த படகு கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த அகதிகள் அனைவரும் கடலில் விழுந்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரு சிலர் நீந்தி உயிர் தப்பினார்கள்.இந்த விபத்தில் 43 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். பத்து பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த முதல் விபத்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *