தென்ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி

தென்ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது மாஷோலாந்து மாகாணம். அங்குள்ள மசோவ் நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சீனா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த பலரும், ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்த்து வந்தனர்.இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை இந்த தங்க சுரங்கத்தில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தொழிலாளர்கள் அனைவரும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதையடுத்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.இந்த விபத்தில் சீனர்கள் 5 பேர், ஜிம்பாப்வேயை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *