தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் தாமதம் அது குறித்து தெரிய வ்ருவதாவது .சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு 10 மணி வரையில் கனமழை பெய்தது. அதன்பின் திடீரென அதி கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலைகள், தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. சென்னையை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பயணிகள் குறித்த நேரத்திற்குள் விமான நிலையத்தை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து துபாய், அபு தாபி, ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் விமானங்கள் என 59 விமானங்களின் வருமை மற்றும் புறப்பாடு நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது.பயணிகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் விமான நிலையத்தை அடைய முடியாத காரணத்தினாலும், லக்கேஜ்களை விமானங்களுக்கு கொண்டு செல்லுவதிலும் ஏற்பட்ட காலதாமதத்தினாலும், விமானங்கள் புறப்படும் நேரத்தில் காலதாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.