கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மக்கள் பெருமூச்சு

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவில் இருந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது.இந்நிலையில் வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் 4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. அப்போது சென்னையில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது.

சற்று நேரம் சென்ற பின்னர், கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியுது.அப்போது மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்தது. அதற்கு முன் கனமழையுடன் காற்று வீசி வந்தது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.இதனால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *