ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மனிதவெடிகுண்டு தாக்குதல் 32 அப்பாவி பொதுமக்கள் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக பகுதியான பாப் அல்-ஷர்கி என்ற இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும், இது ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயலாக இருக்கலாம் என ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில்பலர் கவலைகிடமாக உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஹசன் முகமது அல்-தமிமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *