இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 71 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,680 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 522,278 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 454,532 ஆக அதிகரித்துள்ளது.