இலங்கையில் இன்று ஒரே நாளில் 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 536,645 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,703 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக அதிகரித்துள்ளது.