வடகொரிய மக்களுக்கு உணவுதான் அவசியம், அணு ஆயுதங்கள் அல்ல – வடகொரிய அதிபர் பேச்சு

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடைபெற்ற கட்சி பொதுகூட்டத்தில் அவர் பேசினார் அப்போது அவர் கூறுகையில் வடகொரியாவின் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும், பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமும் தான். வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல. வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும்.இவ்வாறு கிம் ஜாங் உன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *