இந்திய பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இந்தியாவின் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் இன்று மாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.மிர்ஹமா கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். இதேபோல், அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *